ads

சூப்பர் ஸ்டாரின் எந்திரன் 2 கனெக்சனில் விஜய்யின் 62வது படம்

thalapathy 62 movie joined as jayamohan

thalapathy 62 movie joined as jayamohan

 

மெர்சல் வெற்றியை தொடர்ந்து விஜய்யின் 62வது படத்தினை இயக்குனர் ஏஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகவிருக்கிறது. இந்த படம் விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் உருவாக இருப்பதாக முன்னதாகவே தகவல் வெளிவந்தது. மேலும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக 'பைரவா' வெற்றியை தொடர்ந்து இரண்டாவது முறையாக கீர்த்தி சுரேஷ் இணைந்துள்ளார். கடந்த ஜனவரி 19ம் தேதி இப்படத்தின் படப்பிடிப்பிற்கு சிறப்பு பூஜை நடைபெற்று படப்பிடிப்பை நடிகர் விஜய் க்ளாப் அடித்து துவங்கி வைத்தார். விஜய் க்ளாப் அடிக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் வலைத்தளத்தில் வெகுவாக பரவியதோடு போஸ்டர், பேனர் போன்றவையும் சில மணி நேரத்தில் அடிக்கப்பட்டு வைரலானது.

பரபரப்பாக நடைபெற்று வரும் விஜய்யின் 62வது படத்தின் வசன எழுத்தாளராக ஜெயமோகன் இணைந்திருப்பதாக தகவல் வந்துள்ளது. இவர் முதல் முதலில் 'கஸ்தூரி மான்' படத்தின் மூலம் தமிழில் வசனம் எழுத்தாளராக அறிமுகமானார். அதன் பின்னர் நான் கடவுள், அங்காடி தெரு, நீர் பறவை, கடல், காவிய தலைவன், பாபநாசம் போன்ற படங்களில் வசனம் எழுதியிருப்பது குறிப்பிட தக்கது. மேலும் தற்பொழுது சங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள '2.0' படத்திலும் ஜெயமோகன் வசனம் எழுதியுள்ளார்.         

இவர் 12 வயதில் முதல் முறையாக  ரத்னபாலா என்ற பத்திரிக்கையில் எழுத துவங்கினார். அதன் பின்னர் 1987ம் ஆண்டில் கட்டைக்காடு ராஜகோபாலன் இயங்கிவந்த கொல்லிப்பாவை இதழில் இவர் எழுதிய 'கைதி’ என்ற கவிதை மற்றும் கணையாழியில் நதி அசோகமித்திரனின் சிறு குறிப்புகளும் வெளியானது. இதனை தொடர்ந்து படுகை, போதி போன்ற பல கவிதைகள் இவரின் எழுத்தில் வெளிவந்தது. மேலும் இவர் மலையாள நூல்களையும் சில எழுதியுள்ளார். இவர் எழுதிய நூல்களை நெடும்பாதையோரம் என்ற பெயரில் மாத்ருபூமி, பாஷாபோஷினி இதழ்களில் வெளியானது. இதற்கு அடுத்தபடியாக திரையுலகில் எழுத்தாளராக பணிபுரிந்தார். தமிழில் முதல் முறையாக அறிமுகமாகி அதன் பின்னர் ஒழிமுறி படத்தின் மூலம் மலையாள திரையுலகில் அறிமுகமானார்.                    

சூப்பர் ஸ்டாரின் எந்திரன் 2 கனெக்சனில் விஜய்யின் 62வது படம்