ads

நடிகர் கமல்ஹாசன் ரசிகர்களுடன் திடீர் ஆலோசனை

kamal haasan twitter

kamal haasan twitter

நடிகர் கமல் ஹாசன் சமூகம் சார்ந்த கருத்துக்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார். இதனால் விரைவில் அரசியலுக்கு வருவார் என ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தற்போது தமிழகமெங்கும் ஆங்காங்கே பேனர்களை வைத்து உயிர் சேதத்தையும் போக்குவரத்து நெரிசல்களையும் ஏற்படுத்தி வருகின்றனர். இதனை கட்டுப்படுத்த சமீபத்தில் உயிருள்ளவர்களுக்கு பேனர் வைக்க தடை செய்ய உத்தரவு போடப்பட்டது. ஆனாலும் பேனரின் ஆதிக்கம் குறைந்தபாடில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர் கமல்ஹாசன் தனது சமூக வலைத்தளத்தில் "மக்கள் உயிரிழப்பதை பற்றி சற்றும் கவலைப்படாமல் தனது பதவியும் புகழும் மட்டுமே முக்கியம் என நினைக்கும் அரசியல்வாதிகள் விரைவில் தோல்வி அடைவார்கள். 

சாமானிய மக்களை பற்றி கவலைப்படாத எந்த அரசும் அதிக நாட்கள் நீடித்ததில்லை. விபத்துகள் நடக்க வழிவகை செய்வது கொலைக்கு உடந்தையாக இருப்பதற்கு சமம் என்பதை தமிழக பேனர்ஜிக்கள் உணர வேண்டும்." என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் தற்போது சென்னை ஆர்.கே நகர் சட்ட மன்ற தொகுதியில் டிசம்பர் 21-ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. கமல்ஹாசன் தனது நற்பணி மன்ற நிர்வாகிகளை சந்தித்து ஆலோசிக்க முடிவு செய்துள்ளார். அவர்கள் முடிவை அறிந்த பிறகு இடைத்தேர்தல் பற்றிய அறிவிப்பை தெரிவிப்பார் என பல்வேறு தகவல்கள் வெளியாகிறது.

நடிகர் கமல்ஹாசன் ரசிகர்களுடன் திடீர் ஆலோசனை