ads

ஓக்கி புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு சரத்குமார் நேரில் சென்று ஆறுதல்

sarathkumar visit kanyakumari

sarathkumar visit kanyakumari

கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் நேர்ந்த ஒக்கி புயல் காரணத்தினால் பொது மக்களின் வாழ்க்கை சூழல் வெகுவாக மாற்றமடைந்துள்ளது. கடலுக்கு சென்ற பல மீனவர்கள் பாதுகாப்பான முறையில் மீட்கப்பட்டு வருவதோடு சில மீனவர்கள் ஒக்கி புயலால் பரிதாபமாக உயிரிழந்து அவர்களின் உடல் கரையொதிங்கி வருகிறது. இதன் காரணத்தினால் மீனவ குடும்பத்தினர் பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டு வருவதோடு மனவுளைச்சலுக்கும் ஆளாகியுள்ளனர்.     

இதனால் மீனவ குடும்பங்களுக்கு உதவி செய்யும் விதமாக அரசாங்கத்தினர், திரைத்துறை பிரபலங்கள் என அனைவரும் ஆதரவுகளைதெரிவித்து வருகின்றனர். இந்த ஆதரவில் திரைத்துறையில் இருந்து முதல் முதலாக நடிகர், இசையமைப்பாளருமான ஜிவி.பிரகாஷ் குரல் கொடுத்தார். அதன் பின்னர் நடிகர் விஷால் அவரது ட்விட்டரில் ஆதரவுகளை தெரிவித்திருந்தார். இந்நிலையில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் பொது செயலாளர் மற்றும் நடிகருமான சரத்குமார் கன்னியாகுமரியில் ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று அங்குள்ள மக்களின் குறைகளை கேட்டறிந்து அவர்களுக்கு ஆறுதலை அளித்து வருகிறார்.   

ஓக்கி புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு சரத்குமார் நேரில் சென்று ஆறுதல்