ads

சினிமா துறையில் 15 ஆண்டுகளை பூர்த்தி செய்துள்ள நடிகை திரிஷா

trisha krishanan stills

trisha krishanan stills

இயக்குனர் அமீர் இயக்கத்தில் கடந்த 2002-ஆம் ஆண்டு நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவந்த 'மவுனம் பேசியதே' என்ற படத்தின் மூலம் திரையுலகில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை திரிஷா. இந்த படத்தில் இவருடைய நடிப்பு திறைமைக்கு தமிழில் சிறந்த நடிகைக்கான பிலிம் பேர் விருது வழங்கப்பட்டது. இவர் தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் ஏராளமான படங்களை நடித்துள்ளார். இதனை அடுத்து நடிகர் விக்ரமுடன் இணைந்து 'சாமி' படமும், நடிகர் விஜயுடன் இணைந்து 'கில்லி' படமும் அவருக்கு பெருமை சேர்க்கும் படமாகவும் முக்கிய திருப்புமுனையாகவும் அமைந்தது. 

இதே போல் தெலுங்கு சினிமாவிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். சென்னையை சேர்ந்த இவர், திரையுலகிற்கு அறிமுகமாவதற்கு முன்பு சென்னை அழகியாக (Miss Chennai) 1999-இல் தேர்ந்தெடுக்கப்பட்டார். 34 வயதான இவருக்கு தற்போது வரை சினிமா துறையில் பல்வேறு திரைப்படங்களில் நடித்து தனது திறமையை வெளிப்படுத்தி முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் தற்போது '96', 'சதுரங்க வேட்டை 2', 'மோகினி', 'கர்ஜனை' போன்ற படங்களில் நடித்து வருகிறார். நடிகை த்ரிஷாவின் இந்த 15 ஆண்டுகால நினைவிற்கு பல்வேறு ரசிக மக்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் அவருக்கு வாழ்த்துக்களையும் ஆதரவையும் தெரிவித்து வருகின்றனர்.

சினிமா துறையில் 15 ஆண்டுகளை பூர்த்தி செய்துள்ள நடிகை திரிஷா