ads

தனுஷ், அனிருத் ட்விட்டரில் வாழ்த்து......கூட்டணி தொடருமா ?

dhanush and aniruth in why this kolaveri

dhanush and aniruth in why this kolaveri

 அனிருத் '3' படத்தில் 'ஒய் திஸ் கொலவெறி' பாடலின் மூலம் முதல் முதலில் இசையமைப்பாளராக அறிமுகமானார். இந்த ஒரு பாடலிலே மெகா ஹிட் அடித்தார் அனிருத். இந்த படலின் மூலம் அனிருத் மற்றும் தனுஷ் கூட்டணி வலுவடைந்தது. சில ஆண்டுகள் பெரியவர், சிரியவர், இளைஞர்கள் என பலரும் முணுமுக்கும் பாடலாக 'ஒய் திஸ் கொலவெறி' இடம் பெற்றது.   

இந்நிலையில் சில பிரச்சனைகளால் தனுஷ், அனிருத் கூட்டணி கலைந்தது. அதன் பிறகு தனுஷின் படங்களில் அனிருத் இசைக்கு பதிலாக ஷான் ரோல்டன் இசையமைக்க தொடர்ந்தார். இனி இவர்களின் கூட்டணி தொடர வாய்ப்புகள் இல்லை என்று ரசிகர்கள் ஏக்கத்தில் இருக்கும் இந்நிலையில் ரசிகர்கள் மகிழ்ச்சி அடையும் விதத்தில் ட்விட்டரில் பேசியிருக்கிறார்கள்.     

'ஒய் திஸ் கொலவெறி' பாடல் வெளிவந்த 6 வருடங்கள் ஆனதையொட்டி, தனுஷ் தனது ட்விட்டரில் இந்த பாடலின் வெற்றிக்கு அனிருத் தான் காரணம். இது போன்று வெற்றி தொடரட்டும் என்று அனிருத்துக்கு வாழ்த்துக்களையும், நன்றியையும் தனுஷ் தெரிவித்துள்ளார். இதனை பார்த்த அனிருத் 'என்னைவிட, என்மீது அதிக நம்பிக்கை வைத்ததற்கு நன்றி மிகச்சிறந்த பயணம் ப்ரோ' என்று பதில் அளித்திருக்கிறார். இதன் மூலம் அனிருத், தனுஷ் கூட்டணி மீண்டும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது     

தனுஷ், அனிருத் ட்விட்டரில் வாழ்த்து......கூட்டணி தொடருமா ?