ads

'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' படத்தை பற்றி நாயகி நிகாரிகா

heroine niharika says about oru nalla naal paathu solren movie

heroine niharika says about oru nalla naal paathu solren movie

இயக்குனர் ஆறுமுக குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது உருவாகிக்கொண்டிருக்கும் படம் 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்'. இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். படப்பிடிப்பின் போது புகைப்படங்களை எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியீட்டு ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர். பிரபல தெலுங்கு நடிகர் நாகேந்திர பாபுவின் மகளான நிகாரிகா கோனிடேலா இந்த படத்தின் கதாநாயகியாக தமிழில் அறிமுகமாகிறார். 

இந்த படத்தில் அவர் நடித்தது குறித்து அவரிடம் கேட்டபோது " என்னுடைய முதல் படமே பெரிய படமாக அமைந்தது எனக்கு மகிழ்ச்சியடைகிறது. நடிகர் விஜய் சேதுபதி, கெளதம் கார்த்திக் போன்ற எளிமையான நடிகர்களை பார்ப்பது கடினம். அவர்களிடம் இணைந்து பணிபுரிந்தது மிகப்பெரிய அனுபவம். இந்த படத்தில் எனது கதாபாத்திரம் வழக்கமான நாயகி போன்ற இருக்காது. இரண்டு பெயர்களில் இந்த படத்தில் நடிக்கிறேன் அதை படம் பார்க்கும்போது நீங்களே அறிவீர்கள். எனது குடும்பத்தார் எனக்கு அளிக்கும் ஊக்கம் அளவற்றது. என்னுடைய கதாபாத்திரத்தையும் ரசிகர்களிடம் பேசப்படும் என நம்புகிறேன். " என்று தெரிவித்துள்ளார்.

இந்த படத்தை 7 சி என்டர்டைன்மெண்ட் பிரைவேட் லிமிடேட் மற்றும் அம்மா நாராயணா ப்ரோடுக்சன் இணைந்து தயாரிக்கிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி, கெளதம் கார்த்திக், நிகாரிகா, விஜி சந்திரசேகர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.

'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' படத்தை பற்றி நாயகி நிகாரிகா