ads

அறம் படத்தினால் வேலைக்காரன் முன்னேற்றம்

அறம் படத்தினால் வேலைக்காரன் முன்னேற்றம்

அறம் படத்தினால் வேலைக்காரன் முன்னேற்றம்

முன்னணி நாயகர்களுடன் இணைந்து மெகா ஹிட் அளவிற்கு வரவேற்பினை பெற்ற நயன்தாரா தற்பொழுது சோலோவாக நடிப்பதில் களமிறங்கியுள்ளார். நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களிலும், சமூக பிரச்சனைகளை வெளிப்படுத்தும் படங்களிலும் நடித்து வருவதில் ஆர்வம் காட்டும் நயன்தாரா, நடிப்பில் தமிழ் திரையுலகம் திரும்பி பார்க்கும் அளவிற்கு அதிரடி ஹிட் அடித்துள்ளார்.   

இந்நிலையில் நவம்பர் 10ம் தேதி வெளிவந்த 'அறம்' படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றதோடு, திரையுலக வட்டாரத்தின் முக்கிய பிரபலங்களிடமும் பாராட்டினை பெற்றுள்ளார். இதனை அடுத்து நயன்தாரா இனி நடிக்கும் படங்களுக்கு அறம் ஒரு முன்னோட்டமாக இருக்குமா என எதிர்பார்க்கப்படுகிறது.   

நயன்தாரா தற்பொழுது மோகன் ராஜா இயக்கும் 'வேலைக்காரன்' படத்தில் நடித்து வருகிறார். இதில் வருத்தப்படாத வாலிப சங்கத்தின் தலைவர் சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு வெளிவந்த 'இறைவா+உயிரே' பாடல்கள் ரசிகர்களை கவரும் வகையில் இருந்ததால் இதுவரை 2 மில்லியனுக்கு மேல் ரசிகர்கள் இணையதளத்தில் பார்த்துள்ளனர்.      

இந்த பாடலின் வரவேற்பிக்கு காரணம் சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் என ஒரு பக்கம் இருந்தாலும், நயன்தாராவின் ரசிகர்ககளும் முன்பிருந்தே பலர் இருக்கிறார்கள். தற்பொழுது வெளிவந்த அறம் படத்தின் மூலம் இன்னும் எதிர்பார்ப்பு அதிகமாகிவிட்டது. அதனால் வேலைக்காரன் படம் எதிர்பார்ப்பதை விட இன்னும் அதிகளவு முன்னேற்றமடையும் என நம்பப்படுகிறது.    

 

அறம் படத்தினால் வேலைக்காரன் முன்னேற்றம்