ads

அருள்நிதி மற்றும் பிந்து மாதவியின் 'புகழேந்தி எனும் நான்'

arulnithi and  bindhu mathavi new movie

arulnithi and bindhu mathavi new movie

நடிகர் அருள் நிதி தற்போது 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' படத்தில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து இயக்குனர் கருபழனியப்பன் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படம்  முழுக்க அரசியல் சார்ந்த படமாக இருக்கும் என தெரிவித்துள்ளது. இதனால் 'புகழேந்தி எனும் நான்' என்ற தலைப்பை தேர்வு செய்துள்ளனர். இந்த தலைப்பு முதல்வன் படத்தில் நடிகர் அர்ஜுன் முதல்வராக பொறுப்பேற்கும் போது வெளிப்படுத்தும் முதல் வரிகள் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதுள்ள அரசியல் சூழ்நிலைகளுக்கேற்ப இந்த படம் உருவாக இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் இந்த படம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படமாக இருக்கும். இந்த நிலையில் பிந்து மாதவி 'பக்கா' படத்தினை தொடர்ந்து கருபழனியப்பன் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். 

இது குறித்து பிக் பாஸ் புகழ் பிந்து மாதவி கூறும்போது நான் நல்ல கதையம்சம் உள்ள படங்களை தேர்வு செய்வதில் கவனமாக இருக்கிறேன். நல்ல கதைமட்டுமல்லாமல் நாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதையாக இருக்கும் படங்களில் நடிக்க ஆசை படுகிறேன். அப்படி அமைந்த படம் தான் 'புகழேந்தி எனும் நான்'. எப்போதும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இயக்கும் திரு,கருபழனியப்பன். இவருடைய படத்தில் நடிப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த படத்தில் நடிகர் அருள்நிதியின் திரை அனுபவம் அதிகமாகவே வெளிப்படும். டிசம்பரில் தொடங்கும் படப்பிடிப்பிற்கு இப்பொழுதே ஆர்வமாக இருக்கிறேன். என்று தெரிவித்துள்ளார்.

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுப்பாளராக பணிபுரிந்து விஜய் டிவி தொலைக்காட்சியின் புகழை பரப்பியது பிக் பாஸ் நிகழ்ச்சி. அது மட்டும் இல்லாமல் நிகழ்ச்சியில் பங்கு கொண்ட அனைவரின் வாழ்க்கையையும் மாற்றி அமைத்து விட்டது. தற்பொழுது படங்களில் நடிப்பது, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணிபுரிவது என்று பலரும்  பிசியாக மாறிவிட்டனர். இந்நிலையில் ஓவியா, ஆரவ், ஹரிஷ் கல்யாண், ரைசா போன்றவர்கள் படங்களில் நடித்து வருவதில் அதிகளவு ஈடுபட்டு வருகின்றனர்.

 

அருள்நிதி மற்றும் பிந்து மாதவியின் 'புகழேந்தி எனும் நான்'