ads

நடிகர் விஷால் வீட்டில் தங்க நகைகள் திருட்டு

நடிகர் விஷால் வீட்டில் தங்க நகைகள் திருட்டு

நடிகர் விஷால் வீட்டில் தங்க நகைகள் திருட்டு

சென்னை, அண்ணா நகர் பகுதியில் நடிகர் விஷால் தனது குடும்பங்களுடன் வசித்து வருகிறார். இவர் தற்போது இரும்புத்திரை மற்றும் சண்டக்கோழி படங்களில் பிசியாக உள்ளார். இவருடைய வீட்டில் புஷ்பா வயது 35 என்ற பெண் பணிபுரிகிறார். இவருடைய வீட்டில் இருந்த கம்மல், வளையல்கள் மற்றும் மோதிரம் திருடு போயிருக்கிறது. இதனை அடுத்து புஷ்பா என்ற பெண்ணின் மீது சந்தேகம் எழுந்தது. 

அவர் கடந்த சில நாட்களாக வேலைக்கு வருவதில்லை. அவருடைய செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. புகாரின்படி புஷ்பா என்ற பெண்ணை தற்போது போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இதுகுறித்து அவருடைய மேலாளர் ரகுபதி "புஷ்பா என்ற பெண் எங்கள் வீட்டில் வேலை செய்து வந்தார். அவர் தற்போது வேலைக்கு வரவில்லை. அவர் மீது சந்தேகம் உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

நடிகர் விஷால் வீட்டில் தங்க நகைகள் திருட்டு