ads

தயாரிப்பாளர் அசோக் குமார் மறைவை தாங்க முடியாத சசிகுமார்

sasikumar tweet

sasikumar tweet

கடந்த மாதத்தில் நடிகர் சசிகுமாரின் உறவினர் மற்றும் இணை தயாரிப்பாளருமான அசோக் குமார் கந்து வட்டி காரணத்தினால் தற்கொலை செய்துகொண்டார். இந்த கோர செயல் திரை துறையினர் அனைவரையும் அதிர்ச்சியில் தள்ளியது. சில நாட்களாகவே அசோக் குமாரின் கொலை வழக்கு சம்மந்தமான தகவல்கள் வந்த நிலையில் இருந்தது. இந்த தற்கொலைக்கு காரணமான கந்து வட்டி பைனான்சியர் அன்பு செழியன் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

இந்நிலையில் நடிகர் சசிகுமார் தற்போது சமூக வலைத்தளத்தில் 'நீ இருந்து செய்த அன்பும் உன் பின்பான துயரமும் வைராக்கியமாய் என்னை செலுத்தும்' என்று பதிவு செய்துள்ளார். மேலும் அவருடைய நடிப்பில் கொடிவீரன் இன்று வெளியாக இருக்கிறது. கொடிவீரன் படம் வெற்றியடைய பல்வேறு திரைத்துறை நண்பர்கள் தங்களது சமூக வலைத்தளங்களில் ஆதரவையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

தயாரிப்பாளர் அசோக் குமார் மறைவை தாங்க முடியாத சசிகுமார்